முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏற்றுக் கொள்ள முடியாத குற்றவியல் சம்பவம்: கொலம்பியா வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க், கொலம்பியா தலைநகரான பொகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் உள்ள போலீஸ் அகாடமி அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

ஏற்றுக்கொள்ள முடியாத குற்றவியல் சம்பவம் நடந்துள்ளது. வன்முறையில் இருந்து விலகி, வளமான மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான தாக்குதல். இதுபோன்ற தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து