முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராட்சத சுறாவுக்கு அருகே சென்று உயிருடன் திரும்பிய நீர்மூழ்கி வீரர்கள்

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

ஹவாய், உலகிலேயே மிகப் பெரிய ராட்சத சுறாவுக்கு அருகில் சென்று, உயிருடன் திரும்பியுள்ளனர் நீர்மூழ்கி வீரர்கள் குழுவினர். இந்த சாகச சம்பவம் ஹவாயில் நடந்துள்ளது.

ஓஹு தெற்கு கடற்கரைப் பகுதியில் இறந்த திமிங்கலம் ஒன்றின் உடல் மிதந்தது. அதை நோக்கி ராட்சத சுறா வந்த போது நீர்மூழ்கி வீரர்கள் அதைக் கண்டுள்ளனர். இது குறித்துப் பேசிய நீர்மூழ்கி வீரர்களில் ஒருவர்,  ஓஷன் ராமெசா, புலி சுறாக்கள் திமிங்கலம் ஒன்றுக்கு அருகில் வந்த போதுதான் ராட்சத சுறாவைப் பார்த்தோம். பெண் சுறா வந்தவுடன் மற்ற புலி சுறாக்கள் வேகமாகக் கலைந்து சென்றன. உடனே பெண் சுறா, படகின் மீது உரசியது. ராட்சத வடிவில் அழகாக இருந்த பெண் சுறா, எங்களின் படகை உராய்வதற்கான இடமாகப் பயன்படுத்த விரும்பியது. நாங்கள் மெதுவாக அதன் அருகில் சென்றோம். தொட்டுப் பார்த்தோம். நேரலையும் செய்தோம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் போது சென்ற நாங்கள், நாள் முழுவதும் பெண் சுறாவுடன் இருந்தோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து