முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசார் பெரிய மீசை வைத்தால் 5 மடங்கு அலவன்ஸ் உயர்வு: உ.பி. அரசு சலுகை

வெள்ளிக்கிழமை, 18 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ, பெரிய மீசை வைக்கும் போலீஸ்காரர்களுக்கான, படியை ஐந்து மடங்கு உயர்த்த உத்தரபிரதேச போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச காவல்துறை, போலீஸ்காரர்களுக்கு மீசை படிவழங்கி வருகிறது. இந்த படி ரூ. 50-ல் இருந்து ரூ. 250 ஆக உயர்த்த இப்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில காவல் துறை அதிகாரி பினோத் குமார் சிங் கூறும் போது,

முன் காலத்தில் போலீஸ் என்றால் பெரிய மீசை வைத்திருப்பார்கள். இப்போது அந்தப் பழக்கம் குறைந்து விட்டது. இருந்தாலும் சிலர் பெரிய மீசை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே மீசை படியாக, ரூ. 50 வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதை மாற்றி ரூ. 250 ஆக உயர்த்தி தர உள்ளோம். அதோடு மீசையையும் கம்பீரமாக வளர்க்க ஆலோசனையும் கூறியுள்ளோம். மீசை வளர்ப்பதும், வளர்க்காமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், மீசை ஒருவரது ஆளுமையை அதிகரிக்கும். குறிப்பாக போலீஸ்காரரின் ஆளுமையை அது அதிகரித்து காட்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து