முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி மாறியதால் கையை வெட்ட நினைத்தேன்: மத்திய அமைச்சர் குறித்து லல்லு மகள் சர்ச்சை பேச்சு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா, கட்சி மாறியதால் அவரது கையை வெட்ட நினைத்ததாக லல்லு பிரசாத் யாதவின் மகள் மிஸா பாரதி, மத்திய அமைச்சர் ராம் க்ரிபால் யாதவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பாட்னாவின் பிக்ராம் பகுதியில் கடந்த 16-ம் தேதி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மிஸா பாரதி, ராம் க்ரிபால் யாதவ் எங்கள் பண்ணையில் வைக்கோல் வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். இருந்தாலும் அவர் மீது எங்களுக்கு மரியாதை இருந்தது. ஆனால், அவர் எங்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது அதே வைக்கோல் வெட்டும் இயந்திரத்தில் ராம் க்ரிபால் யாதவின் கைகளை வெட்ட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது எனப் பேசினார்.

2014-ல் நழுவ விட்டத்தை வரும் மக்களவைத் தேர்தலில் பிடிப்பேன் எனவும் மிஸா பாரதி கூறியுள்ளார். ராம் க்ரிபால் யாதவ் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். முன்னதாக, இவர் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2014-ல் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அதே ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாடலிபுத்ரா தொகுதியில் மிஸா பாரதியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் மத்திய அமைச்சரைப் பற்றிய மிஸா பாரதியின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து