முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணிக்காகவே வாழ்பவர் டோனி: கேப்டன் விராட் கோலி புகழாரம்!

சனிக்கிழமை, 19 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்போர்ன் : ஒரு அணியாக டோனியின் செயல்பாடுகளில் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்திய கிரிக்கெட் அணிக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் டோனி என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

மீண்டும் நிரூபித்துள்ளார்....

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி சிறப்பாக விளையாடுவதில்லை என்று விமர்சனம் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இதை தவிடுபொடியாக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் டோனி அரைச்சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இதன்மூலம் நான் எப்பவும் சிங்கம் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் டோனி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், 3 ஒரு நாள் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.3 ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றிவாய்ப்பை தேடித் தந்தார் டோனி. முதல் போட்டியில் 51 ரன்களும், 2-வது போட்டியில் 55 ரன்களும், மூன்றாவது போட்டியில் 87 ரன்களும் அடித்தார் டோனி.

அணிக்காகவே வாழ்ந்து...

2019-ம் ஆண்டில் விளையாடிய 3 போட்டிகளிலும் டோனி அரை சதம் அடித்து இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் விராட் கோலி செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:  டோனியின் திறமையை பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் அணிக்காகவே வாழ்ந்து வருபவர் டோனி. அவரைப்போல் இந்திய அணிக்காக வாழ்ந்தவர் யாருமில்லை. இந்திய நாட்டுக்காக நிறைய பங்களிப்பை அளித்துள்ளார் டோனி. அதனால் மக்கள் அவரின் விளையாட்டு குறித்து தவறாக பேசாமல் அவரை அவர் போக்கில் விளையாட விட வேண்டும். அவர் மற்ற விளையாட்டு வீரர்களை போல அல்ல தனித்துவமானவர்; ஒரு அணியாக அவரின் செயல்பாடுகளில் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என்றார் டோனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து