எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 2-1 எனத் தொடரை கைப்பற்றியது. பொதுவாக ஒரு தொடர் தொடங்குவதற்குமுன் இரண்டு பேரை ஒப்பிட்டு, அதில் ஜெயிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு கிளம்பும். அப்படித்தான் ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்தை ஆரோன் பிஞ்ச் எதிர்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. புவனேஸ்வர் குமார் பந்து வீச்சை சமாளித்து விட்டால், அதன்பின் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் புவேனஸ்வர் குமார் புதிய பந்தில் தனது ஸ்விங் திறமையால் ஆரோன் பிஞ்ச்-ஐ நடுங்க வைத்துவிட்டார்.
சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 6 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாரின் ஸ்விங் பந்தை சந்திக்க திணறிய ஆரோன் பிஞ்ச், க்ரீஸை விட்டு அதிக அளவு முன்னாள் வந்து தடுத்தாடினார். இரண்டு முறை ஸ்லிப் திசையில் பந்து எட்ஜ் ஆகியது. ஆனால் தப்பிவிட்டார். அதன்பின் புவனேஸ்வர் குமாரின் முதல் ஸ்பெல்லின் கடைசி பந்தில் ஆரோன் பிஞ்ச் சிக்கினார். இன்ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டானார். டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தியும் பலனில்லை. இதனால் 24 பந்துகளை சந்தித்து 14 ரன்னில் ஆட்டமிழந்தனார். இந்தத் தொடரில் ஆரோன் பிஞ்ச் புவனேஸ்வர் குமார் வீசியதில் 37 பந்துகளை சந்தித்தார். இதில் 30 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. 7 பந்தில் 16 ரன்கள் மட்டுமே அடித்தார். 3 முறையும் அவுட்டாகியுள்ளார்.
எனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பன்ட். சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப், ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். இந்தத் தொடரின் போது, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் டிம் பெய்ன், ”ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (பிக்பாஷ் அணி) க்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மேன் தேவை. ஹோபர்ட் அழகான சிட்டி. அங்கு இவருக்கு நல்ல அபார்ட்மென்ட்டை அளிக்கலாம். நான் என் மனைவியை சினிமாவுக் கு அழைத்துச் சென்றால் என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார்.
அடுத்து இந்தியா பீல்டிங் செய்யும்போது, ரிஷாப் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். ‘’நமக்கு இன்று சிறப்பு விருந்தினர் கிடைத்திருக்கிறார். மயங்க், நீங்கள் எப்பவாது தற்காலி கேப்டன்’ என்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா? பெய்னுக்கு பேசுவது மட்டுத்தான் பிடிக்கும். பேச்சு பேச்சு பேச்சுதான். அவரை அவுட் ஆக்க எதுவும் செய்ய வேண்டாம்’’ என்றார். இந்த கிண்டல் பற்றி இப்போது ரிஷாப்பிடம் கேட்டபோது, ‘’இதுதான் நான். என்னை யாராவது ஆத்திரப்படுத்தினால், நான் சரியான பதிலடி கொடுப்பேன். என் அணிக்காக நான் செய்ய வேண்டிய கடமை இருந்தது. அதோடு எனக்கான எல்லை எதுவென்று தெரியும். அதை மீற மாட்டேன். இந்த கிண்டலை ரசிகர்கள் ரசித்திருக்கிறார்கள். எனது அம்மாவும் சகோதரியும் கூட ரசித்தார்கள்’’என்றார்.
ஐசிசி-யிடம் ராயல்டி கேட்ட விநோதம்!
டோனியை புகழ்ந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) டபிள்யூ.டபிள்யூ.இ. (WWE) நிர்வாகி பால் ஹேமன் ராயல்டி கேட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது. பின்னர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. மெல்போர்னில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அந்நாட்டு மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதித்தது.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அத்துடன், தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார். டோனியைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது. அதில், “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ஐசிசி பதிவிட்ட ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு, டபிள்யூ.டபிள்யூ.இ நிர்வாகி பால் ஹேமன் ராயல்டி கேட்டுள்ளார். அவரது ட்விட்டரில், “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை டோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது. அதனால், எங்களுடைய ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியுள்ளார். பால் ஹேமனின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
புத்திசாலி கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபித்த டோனி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 4 ஓவர்கள் மீதமிருந்தபோது டோனி, கள நடுவரிடம் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டி-20 தொடர் டிராவில் முடிந்தது. பின்னர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது. இதனை அடுத்து நடந்த ஒரு நாள் தொடர் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என சமனில் இருந்தது. இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடந்தது.
முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 4 பந்துகள் மீதமிருந்தபோது இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரையும் வென்று சாதனை படைத்தது இந்திய அணி. இந்திய அணியின் மூளையாகச் செயல்பட்ட டோனியின் புத்தாலித்தனத்தை காட்டும் விதமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போட்டியின் 46-வது ஓவர் முடிந்ததும், தேனீர் இடைவேளை விடப்பட்டது.அப்போது, சகவீரர்கள் குளிர்பானங்கள் குடித்துக்கொண்டிருக்க டோனி மட்டும், நடுவரிடம் சென்று ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் யாருக்கெல்லாம் எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன என்பதை விசாரித்துக்கொண்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.