முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் - கிம் அடுத்த மாதம் மீண்டும் பேச்சு வெள்ளை மளிகை அதிகாரபூர்வ அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாவது உச்சி மாநாட்டில் டிரம்பும், கிம் ஜாங் உன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்காக உழைப்பது என இருவரும் உறுதியேற்றுக் கொண்டனர்.

ஆனால் அந்த ஒப்பந்தத்தின்படி வடகொரியா உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்று அமெரிக்கா கருதியது. இருப்பினும், மீண்டும் உச்சி மாநாடு நடத்தி டிரம்பை சந்திக்க கிம்ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவரது சிறப்பு தூதரான கிம் யாங் சோல், வாஷிங்டன் சென்று டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர், டிரம்பிடம் கிம் ஜாங் உன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அணு ஆயுத கைவிடல் தொடர்பாக அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியில் இரண்டாவது உச்சி மாநாடு நடத்தி டிரம்பும், கிம் ஜாங் அன்னும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதே நேரத்தில் இரண்டாவது உச்சி மாநாடு எங்கே நடத்தப்படும் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து