எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, தன் குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திக்க கூடிய கட்சிதான் தி.மு.க. என்றும், எந்தக் காலத்திலும் ஸ்டாலினால் முதல்வர் பதவிக்கு வர முடியாது என்றும் மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை தனி வட்டமாக அறிவித்ததற்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பெரிய வட்டங்களை தனியாகப் பிரித்து சிறிய வட்டங்களாகப் பிரிக்கும் போதுதான் கடைக்கோடிப் பகுதியில் உள்ள மக்கள் எளிதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்குத் தேவையான மற்றும் உதவிகளைப் பெற முடியும். அந்த வகையில்தான் கள்ளிப்பட்டி வட்டம் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசுதான் அதிக எண்ணிக்கையில் புதிய வட்டங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்றைக்கு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் எதையும் செய்ததாக தெரியவில்லை. எந்தச் சாதனையும் பெரிதாக செய்ததாக தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். மாநிலத்திலும் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் குடும்பம் மட்டும் வளம் பெற்றது. தி.மு.க. கட்சி என்றால் அந்த கட்சிதான் குடும்ப கட்சி. ஆனால் அ.தி.மு.க. ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்த கட்சி. இந்தக் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. இந்தக் கட்சியில் சாதாரண நிலையில் இருப்பவர்களும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஏன் முதல்வராக கூட அ.தி.மு.க.வில்தான் வர முடியும். வேறு எந்தக் கட்சியிலும் வர முடியாது. தி.மு.க.வில் கருணாநிதி முதல்வராக இருந்தார். அதற்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு துடிக்கிறார். எந்தக் காலத்திலும் அவர் முதல்வராக வர முடியாது. அது வேறு விஷயம். அதற்குப் பிறகு வாரிசு. அவரின் மகன் உதயநிதியை கட்சிக்கு கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி முயன்று பார்க்கிறார். இதுதான் வாரிசு அரசியல். மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய கட்சிதான் தி.மு.க.
சிந்திக்கக் கூடிய கட்சி. என்னைப் பொறுத்தவரை கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருபவன். மேடையில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறவர்கள். கிராமத்தில் இருக்கின்ற விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியும். அதில் வேலை செய்கின்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதும் தெரியும். மக்களோடு மக்களாக நின்று பழகி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு உங்களின் பேராதவரோடு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். ஆகவே விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசு இந்த அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல விவசாய தொழிலாளி வளர வேண்டும். வாழ வேண்டும். சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை அம்மாவின் அரசு வழங்கும். அம்மா வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். சாதாரண குடிசையில் வாழும் ஏழைகள் கூட கிரைண்டர், மிக்ஸியை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிக்ஸி, கிரைண்டர் வழங்கியவர் அம்மா. அவர் எடுத்த நடவடிக்கையால் இன்றைக்கு மக்கள் செழிப்போடு இருக்கின்ற காட்சியை பார்க்கின்றோம். எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு இன்றைக்குப் பொய்யான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளீர்கள். பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஆயிரம் ரூபாயை வழங்கினோம். இதைக் கூட எதிர்க்கட்சிகள் குறை கூறினார்கள். தி.மு.க. இதனைத் தடுத்து நிறுத்த வழக்கு போட்டது. ஏழைகளுக்கு கொடுப்பதைக்கூட தடுத்து நிறுத்துகிற கட்சிதான் தி.மு.க. எம்.ஜி.ஆர். அம்மா ஆகிய இருவரும் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். மக்கள்தான் அவர்களுக்குக் குடும்பம். மக்களின் பிரச்சனையை தன் பிரச்சனையாக கருதிச் செயல்பட்டவர்கள். அந்த வழியில் வந்த அம்மாவின் அரசையும் மக்கள்தான் வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்குத் துணை நிற்பவர்கள் மக்கள். அது போல இந்த இயக்கத்திற்குத் தலைவர் என்பவர் இல்லை. தொண்டர்களால் இயக்கப்படுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். நாடாளுமன்ற தேர்தல் விரைவாக வரவுள்ளது. என்னவெல்லாமோ பொய்களை சொல்வார்கள். இன்றைக்கு கிராமம் கிராமாக சென்று பார்க்கிறார்கள். இத்தனை நாட்களாக கிராமத்தில் உள்ள மக்களை ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லை. கிராம மக்களுக்கு கொடுப்பதையே தடுத்து நிறுத்துபவர்கள், இவர்கள் எப்படி நல்லது செய்யப் போகிறார்கள். இதனை எல்லாம் நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நம்முடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக புதிய திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வர வேண்டியதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்குத் தமிழகம் அனைத்து வகையிலும் முதன்மை மாநிலமாக விளங்குவதற்கு அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர் வழியாக நெல்லை சென்றார். சாத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.