முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ணை வீட்டில் 5 நாள் பிரம்மாண்ட சண்டி யாகம் தெலுங்கானா முதல்வர் நடத்துகிறார்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சித்திபேட் மாவட்டத்தின் எரவல்லி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 5 நாட்கள் நடக்கும் பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

தெலுங்கானா முதல்வராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட பிறகு சந்திரசேகர ராவ் நடத்தும் முதல் பிரம்மாண்ட யாகம் இது. நேற்று துவங்கிய இந்த பிரம்மாண்ட மகா ருத்ர சகித சகஸ்ர சண்டி யாகம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சமார் 200 வேத விற்பன்னர்களும், பல்வேறு மடாதிபதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த பிரம்மாண்ட யாகத்தில் தெலுங்கானா கவர்னர் நரசிம்மனும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு முன் இத்தகைய பிரம்மாண்ட யாகம் ஒன்றை சந்திரசேகர ராவ் நடத்தினார். அதற்கு முன் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜையும் நடத்தினார். 2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட மகா சண்டி யாகத்தில் 1100 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு 10,000 முறை வேதங்கள் ஓதியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து