எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
துணை ஜனாதிபதி...
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் தமிழக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிறைவுரையாற்றுகிறார்.
12 முன்னணி நிறுவனங்கள்...
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. 2-வது முறையாக மீண்டும் நடக்கும் இம்மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மாநாட்டையொட்டி அமைக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் ஆகியோரின் தயாரிப்பு மற்றும் சேவைகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதில் மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
கருத்தரங்கு...
மாநாட்டில் காலையில் ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்த முதலீட்டாளர்கள் கருத்தரங்கும், பகல் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கும் நடக்கிறது. அதன் பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் பெயர் பதிவு செய்யப்படும். 10 மணிக்கு மாநாடு துவக்கப்படும். தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி, புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல், எதிர்பார்க்கப்படும் சவால்களை சமாளித்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு பிற்பகல் 2 மணிக்கு துவங்கும்.
கல்வி-வேலைவாய்ப்பு...
எம்.எஸ்.சண்முகம் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் நிர்வாக இயக்குனர்) வி.எஸ். பார்த்தசாரதி (மகேந்திரா குரூப்), வெங்கட்ரமணி (ஐ.பி. ரிங்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர்), அனந்த் கோயங்கா (சியாட் லிமிடெட் நிர்வாக இயக்குனர்), மைக்கேல் ப்ரீல்மெயர் (போர்டு மோட்டார்ஸ் தலைவர் நிர்வாக இயக்குனர்), ஆகியோர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் கல்வி முதல் வேலைவாய்ப்பு என்னும் தலைப்பில் 7 பேர் உரையாற்றுகிறார்கள்.
விருப்பமான இடம்...
ஏரோஸ்பேஸ் ராணுவ தொழில்களுக்கு விருப்பமான இடம் தமிழ்நாடு என்னும் தலைப்பில் ரமேஷ் சந்த் மீனா (டிட்கோ தலைவர்), ஆர். சுந்தரம் (சேலம் ஏரோ பார்க் தலைமை செயல் அதிகாரி), ஏர்மார்ஷல் எம். மாதேஸ்வரன் (ஓய்வு: பெனின்சுலா பவுண்டேஷன் தலைவர்), வினோத் சுரானா (சுரானா, சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னீஸ் தலைமை நிர்வாக அதிகாரி பங்குதாரர்) ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
பயோ டெக்னாலஜி பார்மசூட்டிக்கல்ஸ், மருத்துவக் கருவிகள் தயாரித்தல் என்னும் தலைப்பில் அபயக்குமார் ஜெயின் (வெங்கடநாராயணா ஆக்டிவ் இன்க்ரீடியன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர்), டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு (ட்ரிவிட்ரான் ஹெல்த் கேர் (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர்) உரையாற்றுகிறார்கள்.
சமீபத்திய போக்குகள்...
தமிழ்நாட்டில் தொழில்கள் நடத்துவதை எளிமைப்படுத்திய சமீபத்திய போக்குகள் என்னும் தலைப்பில் சந்தானம் (செயின்ட் கோபைன் கிளாஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நிர்வாக இயக்குனர்), கே.ராமசுவாமி ரூட்ஸ் குரூப் செயல் தலைவர் உள்ளிட்ட 7 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புக்காக உருவாகும் தொழில்நுட்பங்கள் என்னும் தலைப்பில் 6 பேர் உரையாற்றுகிறார்கள்.
வாய்ப்புகள் - சவால்கள்...
தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் சவால்களும் என்னும் தலைப்பில் ரமேஷ் சந்த் மீனா (டிட்கோ நிர்வாக இயக்குனர்) உள்ளிட்ட 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் உள் கட்டமைப்பு முன்னேற்றம் தனியார் ஈக்குவிட்டி, தனியார் கடன் உள்ளிட்ட முக்கிய நிதி குறித்த அம்சங்கள் பற்றி 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான மையம் முன்னோட்டப் பாதை என்னும் தலைப்பில் கார்த்திக் ஆத்மநாதன் (ஈ.வி & ஈ மொபிலிட்டி சொல்யூஷன்ஸ், அசோக் லேலண்ட் லிமிடெட் தலைவர்) உள்பட 7 பேர் உரையாற்றுகிறார்கள்.
2-ம் நாள் மாநாடு...
கொரியா குடியரசு நாடு கருத்தரங்கில் தீபக் பரத்வாஜ் (சாம்சங், இந்தியா துணைத் தலைவர்) உள்ளிட்ட 5 பேர் உரையாற்றுகிறார்கள். அடுத்து 24-ம் தேதி 2-ம் நாள் மாநாடு துவங்குகிறது. தொழில்துறை கட்டமைப்பில் தொழில்துறை காரிடார் கட்டமைப்பில் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம் என்னும் தலைப்பில் 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் மதம் சுகாதாரம் பாரம்பரியம் சுற்றுலா ஆகிய துறைகளில் முதலில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இந்து, அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் உள்பட 8 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி கேந்திரமாக மாற்றுதல் என்னும் தலைப்பில் அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு உள்பட 6 பேர் உரையாற்றுகிறார்கள்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்...
தமிழ்நாட்டில் வேளாண் உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் வாய்ப்புகள் குறித்த உரையாடல் நடைபெறுகிறது. இதே போல தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், கட்டிட நிர்மாணம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து 10 பேர் உரையாற்றுகிறார்கள். சேமிப்புக் கிடங்கு துறை மற்றும் சென்னை அடுத்த தலைமுறைக்கான நிதிவள கேந்திரமாக உருமாற்றுதல் என்னும் தலைப்பில் 15 பேர் உரையாற்றுகிறார்கள். பிற்பகல் 3 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அதையடுத்து நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.