முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில் -  சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று முருகப்பெருமான் ஒளவையாரிடம் கேள்வி கேட்டு அவரை வியப்பில் ஆழ்த்திய புனித ஸ்தலமானது மதுரையை அடுத்த அழகர்மலையின் உச்சியில் உள்ள ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் ஆகும். இக்கோவிலில் முருகப்பெருமான் காட்சி தந்த அந்த அபூர்வ அதிசய நாவல்மரம் இன்றளவும் கோவில் அருகாமமையில் உள்ளது. இப்படி பிரசித்தி பெற்ற இந்த முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது தைப்பூச விழாவாகும். இந்த விழா கடந்த 12 ம் தேதி காலையில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பூதம், அன்னம், காமதேனு, ஆட்டுக்கிடாய், பூச்சப்பரம், யானை, குதிரை, வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் சுவாமிபுறப்பாடு நடந்தது.
 நேற்று காலையில் தைப்பூசத்தையொட்டி  தீர்த்த வாரியும், யாகசாலை கலச அபிஷேகமும், தீர்த்த கலச ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து உற்சவ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் பால், பழம் பன்னீர், புஷ்பம், தேன், சந்தனம், விபூதி, தீர்த்தம், இளநீர், வாசனைதிரவியங்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சரவிளக்கு தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிக்கும், வித்தக விநாயகருக்கும், ஆதிவேல் சன்னதியிலும் விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடந்தது. இவ்விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து