முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் தேர்வு: ஐ.சி.சி. அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      விளையாட்டு
Image Unavailable

இந்திய அணியின் ரிஷப் பண்ட்டை 2018-ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் வீரராக ஐசிசி அறிவித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் தனது திறமையை வெளிக்காட்டியிருந்தார் ரிஷப் பண்ட். 21 வயதான அவர், சிட்னி டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் விளாசியதோடு கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் எனும் பெருமையையும் பெற்றார்.

மேலும், ஆஸிக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலும் பன்ட் சதமடித்து அசத்தியிருந்தார். அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட்டில் அதிகப்படியான அதாவது 11 கேட்ச் பிடித்து முந்தைய சாதனையை சமன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து