எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் 2 நாள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2-வது சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
துவக்கி வைத்தார்...
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2-வது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தமிழக அரசு மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
புதிய சாதனை...
பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ல் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பிரதிநிதிகள் பதிவு ஆகியவை நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆயத்த பணிகளை நாங்கள் துவங்கியதில் இருந்து கடந்த ஓராண்டில் புதிய முதலீட்டு திட்டங்கள் வந்த வண்ணம் இருந்தன. தமிழக தொழில்துறை வரலாற்றில் இது மிக முக்கியமான தருணம் ஆகும். முதலீட்டு துறையில் நாங்கள் புதிய சாதனையை படைத்திருக்கிறோம். 2015 செப்டம்பரில், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையில் செயல்பட்ட தமிழக அரசு முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு 2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தது. இந்த திட்டங்கள் 3 முதல் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.
தொழில் மயமாக்கலில்...
நாங்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் கண்காணிப்பதன் மூலம் பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளதோடு, பல திட்டங்கள் துவக்கும் சூழ்நிலையை எட்டியுள்ளது. 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியை தொடர்ந்து ஜெயலலிதா அரசு தற்போது 2-வது மாநாட்டை நடத்துகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பில் இருந்து இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பது மட்டுமல்லாமல், தமிழக வருடாந்திர தொழில் மயமாக்கலில் வரலாற்று சிறப்புமிக்க நினைவு கூரத்தக்க வகையில் இருக்கும்.
2-வது மாநிலம்....
கடந்த 30 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதிலும் வலுவான முறையில் வளர்ச்சி அடைவதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய நிரந்தர பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதத்தில் 8.4 சதவீதத்தை தமிழகம் எட்டியுள்ளது. 1992-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் கொள்கை காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் புரட்சி ஏற்பட்டது. போர்டு, ஹுண்டாய் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆட்டோமொபைல் துறையில் உலகத்திலேயே மிகப் பெரிய மையமாக சென்னை உருவெடுத்துள்ளது.
2003 - 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த மிகப் பெரிய எலக்ட்ரானிக் தொழிற்சாலையும் இல்லை. 2003-ம் ஆண்டில் கொண்டு வந்த தொழில் கொள்கை காரணமாக எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை துறையில் தமிழகம் உலக அளவிலான முக்கிய நிறுவனங்களை கவர்ந்து ஒரு மகத்தான புரட்சியை கண்டது. ஸ்ரீபெரும்புதூரில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான உதிரி பாகங்களை அசெம்பிள் செய்யும் பாக்ஸ்கான் முதலீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மின் துறையில் புரட்சி
ஜெயலலிதாவின் செயல்பாடு காரணமாக 2011-ம் ஆண்டு எரிசக்தி துறையில் பெரிய அளவு பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்த நிலையில் அவரது நடவடிக்கை காரணமாக எரிசக்தி துறையில் உபரி மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மின்துறை ஒரு புரட்சியை செய்துள்ளது. தற்போது மின் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாகவும் மின் மிகை மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.
வறுமை ஒழிப்பு...
இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரியை விட வறுமையை மிக வேகமாக ஒழித்த ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மாநிலத்தின் மனித வளர்ச்சி குறியீடானது இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. தேசிய சராசரியில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் சுகாதாரம், கல்வி, ஊட்டசத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலன், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட சமூக நலத்துறையில் அதிக அளவில் செலவிடப்பட்டதே ஆகும்.
வெளிநாட்டு முதலீடுகள்
நாட்டிலேயே தற்போது சிறந்த கல்வியும் திறமையும் உடைய பணியாளர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கல்வியும் மேம்பாடும் இணைந்த குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் 48.60 சதவீதத்துடன் தமிழகம் உயர்ந்த இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 7.2 கோடி மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் அதில் 50 சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள். உற்பத்தி மற்றும் சேவை துறையில் வலுவான செயல்பாட்டிலும் புதுமையான பொருளாதார அடிப்படையிலும் தமிழகம் சிறப்பாக உள்ளது. உயர்ந்த தரமான திறமை உடைய மனித வளம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முதலீட்டை ஈர்க்கும் மையமாக விளங்குகிறது.
தமிழகம் முன்னணியில்...
நாட்டிலேயே வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ப்ரோஸ்ட் அன்ட் சுலிவன் மற்றும் என்.சி.ஏ.இ.ஆர். ஆகிய சர்வதேச ஆலோசனை நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்பு உள்ள முன்னணி மாநிலமாக தமிழகத்தை பட்டியலிட்டுள்ளது. ஜவுளி, தோல், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், கனரக மற்றும் இலகுரக என்ஜினியரிங், எலக்ட்ரானிக் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், மருத்துவம் உள்ளிட்ட தொழில்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
புதிய கொள்கைகள்
சுற்றுச்சூழல், சுற்றுலா கொள்கை, வன கொள்கை, இளைஞர் நல கொள்கை, உணவு பதப்படுத்தல் கொள்கை, மின்னணு நிர்வாகம் மற்றும் ஐசிடி கொள்கை உள்ளிட்டமுக்கிய வளர்ச்சி துறைகள் தொடர்பாக விரிவான கொள்கையையும் நாங்கள் வகுத்திருக்கிறோம். புதிய தொழில் சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக புதுமையாக புதிய கொள்கைகளை நாங்கள் துவக்கியிருக்கிறோம். ஊக்கத் தொகையுடன் கூடிய புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மி்ன்சார வாகன கொள்கையை துவக்க இருக்கிறோம். பாதுகாப்பு துறை அமைச்சர் வானூர்தி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி கொள்கையை இப்போது துவக்கி வைத்துள்ளார்.
ஆட்டோமொபைல் உற்பத்தி
வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி துறையை ஊக்குவிக்க எங்களது அரசு ஸ்ரீபெரும்புதூரில் பிரத்யேகமாக 250 ஏக்கரில் அமைத்திருந்த வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பூங்காவை 700 ஏக்கராக விரிவாக்கம் செய்துள்ளது. இதில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மற்றும் எலெக்ட்ரானிக் மையமும் அடங்கும். அதே போல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமல்ல, பல்வேறு தொழிற்சாலைகளும் தமிழகத்திற்கு வரவிருக்கின்றன.
அனைத்து துறைகளிலும்...
மிக சமீபத்தில் 2018 நவம்பரில், முக்கிய பத்திரிகையான இந்தியா டூடே, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவில் தமிழகம் அனைத்து துறையிலும் ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் முதலிடத்திலும், சுற்றுலா துறையில் முதலிடத்திலும், கட்டமைப்பு துறையில் 2-வது இடத்திலும், வளர்ச்சி உள்ளடங்குதலில் 3-வது இடத்திலும், கல்வியில் 3-வது இடத்திலும், தொழில்முனைவில் 3-வது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ. 2 லட்சம் கோடி முதலீடு
அடுத்த 2 நாட்களில் 5 நாடுகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் உள்ளிட்ட 25 கருத்தரங்களை நாங்கள் நடத்துகிறோம். பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்றவை நமது ஒத்துழைப்பு நாடுகளாக உள்ளன. அந்த நாடுகளின் அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்காக 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இது ஏற்கனவே இலக்கை எட்டி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய வாய்ப்பு
நாளை (இன்று) நடைபெறும் சந்திப்பின் போது ஒட்டுமொத்த முதலீடுகள் தொடர்பாகவும், இந்த மாநட்டின் வெற்றி தொடர்பாகவும் நான் அறிவிக்க இருக்கிறேன். தமிழகம் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி உள்ளது. தமிழகத்துடன் இணைந்து தொழில் துவங்க உள்ள உங்களை எல்லாம் வாழ்த்துவதோடு, மிகப்பெரிய வாய்ப்பு நிறைந்த இந்த மாநிலத்தில் உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்படும். இந்த நாட்டையும், மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பங்கேற்பாளர்களாகவும், அதை செயல்படுத்தும் மாநிலமாகவும் நாம் விளங்குகிறோம். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்துள்ள உங்களை எனது சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மீண்டும் ஒருமுறை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.