முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதியாக இருந்து ராணுவ வீரராக மாறி மரணம் அடைந்தவருக்கு சக்ரா விருது

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பயங்கரவாதியாக இருந்து ராணுவ வீரராக மாறி வீர மரணம் அடைந்தவருக்கு அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அசோக சக்ரா விருது, லான்ஸ் நாயக் நசீர் அகமது வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பயங்கரவாதியாக இருந்த லான்ஸ் நாயக் நசீர் அகமது வானி, பின்னர் ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாதிகளுடான துப்பாக்கிச் சண்டையின் போது அவர் வீர மரணம் அடைந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அசோக சக்ரா விருதுக்கு லான்ஸ் நாயக் நசீர் அகமது வானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஷேகி அஸ்முஜி என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லான்ஸ் நாயக் நசீர் அகமது வானி வசித்து வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து