முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிரதமராவதை மம்தா விரும்பவில்லை - காங். மூத்த தலைவர் கவுரவ் கோகாய் பாய்ச்சல்

வியாழக்கிழமை, 24 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : அடுத்த பிரதமராக ராகுல் வருவதை மம்தா விரும்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ராம்பூர் ஹட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் பேசியதாவது:-

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டில் கொல்கத்தாவில் சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடந்தது. ஆனால் அக்கட்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஏதோ பிரச்சினை உள்ளது. அவர் நாட்டின் அடுத்த பிரதமராக வருவதை அக்கட்சியும், மம்தாவும் விரும்பவில்லை. அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் பதவியேற்பார். அவரது தலைமையில்தான் புதிய அரசு பதவியேற்கும் என்பதை திரிணாமுல் காங்கிரசுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மம்தா பிரதமராக பதவியேற்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் திரிணாமுல் காங்கிரசார் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து