முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய ஊழியர் கைது

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், மருத்துவமனையில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் 29-ம் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் உண்மையை கண்டறிவதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களையும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் அந்த மருத்துவமனையில் ஆண் நர்சாக பணியாற்றும் நாதன் சுதர்லாந்த் என்பவர் தான், கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து பீனிக்ஸ் நகர போலீசார் அவரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து