முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முன்னாள் முதல்வர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ரோடக், அரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா இல்லத்தில் நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில் 3,360 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளருக்கு முறைகேடாக ஒதுக்கி பணப்பலன் அடைந்ததாக அரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் சில அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக நேற்று டெல்லி உட்பட 30 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் ஒரு பகுதியாக அரியானா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து