முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தில் 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன் கைது

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், ஐதராபாத்தில் 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.  

ஐதராபாத் புறநகர் பகுதியான துண்டிகாலில் 2 வயது குழந்தை பக்கத்து வீட்டுக்காரனான மொய்னுதீன் என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பதாக கூறி கடத்திச் சென்று அவன் பலாத்காரம் செய்துள்ளான். குழந்தையை காணவில்லை என்று பெற்றோர் தேடிய போது அங்கிருந்த புதரில் குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது மொய்னுதீன் குழந்தையை தூக்கிச் செல்வது தெரிய வந்துள்ளது. குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து