முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை கட்டிப்பிடிக்க தோன்றுவது ஏன்? ராகுல் காந்தி விளக்கம்

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர், பிரதமர் நரேந்திர மோடியை கட்டிப்பிடிக்க தோன்றுவதற்கான காரணம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமான விளக்கமளித்துள்ளார்.

புவனேஷ்வரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

என் கொள்கைகள், கோட்பாடுகளில் பிரதமர் மோடிக்கு உடன்பாடு இருக்காது. அதைப் போலத்தான், அவருடைய கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அரசியலில், நான் மோடியை முழு மூச்சுடன் எதிர்ப்பேன். அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்து விடக் கூடாது என்பதில் நான் உறுதி காட்டுகிறேன். அதே நேரம், எக்காரணம் கொண்டும் மோடியை நான் வெறுத்து விட மாட்டேன். தவறாகவே இருந்தாலும், தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த மோடிக்கும் முழு உரிமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.விடமிருந்து எனக்கு எதிராக வந்த தூற்றுதல்கள்தான் என்னை ஒரு நல்ல அரசியல்வாதியாக உருவாக்கி உள்ளது. எனவேதான், பிரதமர் மோடி என்னை தூற்றினால் அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து