முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணிப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்ரியா மீது வழக்குப் பதிவு

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

காக்கிநாடா, பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக பத்மாவதி என்பவர் கிழக்கு கோதாவரி மாவட்டம், சாமர்லகோட்டா போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கிழக்கு கோதாவரி மாவட்டம், தண்ட்ரவாடா கிராமத்தை சேர்ந்த நாங்கள் ஏழ்மையின் காரணமாக எனது மகள் சந்தியாவை, சென்னையில் வசிக்கும் நடிகை பானுப்ரியா வீட்டில் வீட்டுவேலை செய்ய அனுப்பினோம். மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதியமாக தருவதாக கூறினார். ஆனால், ஒன்றரை ஆண்டுகளாக மாத ஊதியம் வழங்கவில்லை. மேலும், அவரது தம்பி, எனது மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்து உள்ளார். தற்போது என் மகள் மீது திருட்டு பட்டம் சூட்டியுள்ளார். இவ்வாறு பத்மாவதி கூறினார். இது குறித்து போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடிகை பானுப்ரியா கூறும் போது, சந்தியாவுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்குகிறேன். ஆனால், அந்த பெண் பணம், நகை, செல்போன், கேமரா போன்றவற்றை திருடி இருக்கிறாள். நான் கேட்டதற்கு, செல்போன், கேமரா போன்றவற்றை கொடுத்து விட்டாள். ஆனால், திருடிய ரூ.1.5 லட்சத்தை கேட்டதற்கு, அவரது தாயார் பத்மாவதி போலீசில் பொய் புகார் அளித்துள்ளார். இதனை நான் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து