முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.10ஆயிரமாக உயர்வு: தமிழக அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.7,500- ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

ஜாக்டோ, ஜியோ போராட்டத்தையடுத்து தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து