முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

பாரத ரத்னா, இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது. முதன்முதலாக 1954-ம் ஆண்டு இந்த விருது உருவாக்கி வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2015-ம் ஆண்டு வரை மொத்தம் 45 பேர் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள். பாரத ரத்னா விருதை முதன்முதலாக 1954-ல் பெற்றவர், தமிழக முன்னாள் முதல்வரான ராஜாஜி தான். அதே ஆண்டு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் பாரத ரத்னா விருது பெற்றார்.

1976-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர், 1988-ல் எம்.ஜி.ஆர், 97-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், 98-ல் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, 98-ல் பசுமைப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட 7 பேர் பாரத ரத்னா விருது பெற்றனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சமூக ஆர்வலர் நனாஜி தேஷ்முக், பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து