எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மவுங்கனுஹில் உள்ள பே-ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் நியூஸிலாந்து வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சிக்கிடையே பேட்டியளித்துள்ள நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், “இந்திய வீரர்கள் திறமையானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களுடன் நாங்கள் பல போட்டிகளில் மோதியுள்ளோம். அவர்கள் நல்லவர்கள் என்பதால், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேசமயம் எங்கள் வீரர்களிடம் அதைவிட அதிகம் எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம்” என்றார்.
_____________
ரஞ்சி ஃபைனலில் விதர்பா அணி!
உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபி தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்த கேரள அணி, நடப்பு சாம்பியன் விதர்பாவை எதிர்கொண்டது. இந்த அணிகளுக்கு இடையிலான போட்டி, கேரள மாநிலம் வயநாட்டில் நடந்து வந்தது. கேரள அணி, முதல் இன்னிங்ஸில் 106 ரன் எடுத்தது. விதர்பா வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி, 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா, 208 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேரள அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளும் பசில் தம்பி 3 விக்கெட்டுகளும் நிதீஷ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
பின்னர் கேரள அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. உமேஷ் யாதவ் மற்றும் யாஷ் தாகூரின் சிறப்பான பந்துவீச்சில், அந்த அணி வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். இதையடுத்து அந்த அணி, 24.5 ஓவரில் 91 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உமேஷ் 5 விக்கெட்டும் தாகூர் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவும் சவுராஷ்ட்ரா அணியும் மோதி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, விதர்பா அணியுடன் இறுதி போட்டியில் மோதும்.
___________
பாக். கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மன்னித்துவிட்டோம் - டு பிளிசிஸ்
பாக். - தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி டர்பன் நகரில் நடைபெற் றது. இதில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மூன்றாவது வீரராக களமிறங்கிய, வான்டர் டஸ்செனும் பெலுகுவாயோவும்தான் காரணம். இவர்கள் ஆடிக்கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன் அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார்? உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்?’’ என இந்தியில் பேசியுள்ளார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது.
இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில் லை. யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள் ளது. இனி இதுப்போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.
இந்நிலையில் சர்பிராஸ் மன்னிப்புக் கேட்டதால், அவரை மன்னித்துவிட்டதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் டுபிளிசி ஸ் தெரிவித்துள்ளார். ‘’தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட வரும் போது வீரர்கள் எச்சரிக்கையாக பேச வேண்டும். அவர் தன து செயலுக்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டுவிட்டார். நாங்கள் அவரை மன்னித்துவிட்டோம். அதற்காக இந்த விவகாரத் தை சாதாரணமாக எடுத்துக்கொண்டோம் என்று அர்த்தம் இல்லை. பெலுக்வாவ்யோ இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் இதை கவனிக்கவும் இல்லை. மொழி தெரியாததால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை’’ என்று தெரிவித்தார்.
_____________
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய 'தடுப்புசுவர்' புஜராவுக்கு பிறந்த நாள்!
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் பேட்ஸ்மேன் புஜாரா. 7 இன்னிங்சில் களமிறங்கி 521 ரன்கள் விளாசியது, இந்தியாவின் 71 ஆண்டுகளாக தாகம் தீர்க்க உதவியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் 3 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என பேட்டிங் சராசரி 74.42 ஆக வைத்திருந்த புஜாரா, தொடர் நாயன் விருதை தட்டிச் சென்றார். இதனால், பாகுபலி, இந்திய அணியின் நவீனகால சுவர் உள்ளிட்ட பல பெயர்களை புஜாராவுக்கு சூட்டியுள்ளனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
இந்நிலையில், புஜாரா நேற்று தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு முன்னாள், இன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக், “நீங்கள் ஆடுகளத்தில் இருக்கும்போது, ‘பொறுமையின் சிலை’ ஆக இருக்கிறீர்கள், மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்” என கூறியுள்ளார். ஐசிசி தனது ட்விட்டரில், “டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், இந்தியாவின் ராக்கிங் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா, டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 500 பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார். அண்மையில், ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புஜாரா இரட்டை சதம் அடித்த வீடியோவை பதிவிட்டு, பிசிசிஐ வாழ்த்து தெரிவித்துள்ளது.
___________
WWE போட்டியில் களமிறங்கும் ‘தல’ டோனி?
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனி 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரை சதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார். டோனியைப் பாராட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ட்விட்டரில், “சாப்பிடு, தூங்கு, போட்டியை வெல், அதையே திரும்பச் செய்” என குறிப்பிட்டிருந்தது. ஐசிசி-யின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு, டபிள்யூ.டபிள்யூ.இ போட்டியில் விளையாடும் யுனிவெர்சல் சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் வழக்கறிஞர் ஹேமன் ராயல்டி கேட்டடிருந்தார். அவரது ட்விட்டரில், “WWE சாம்பியன் ப்ரோக் லெஸ்னரின் #EatSleepConquerRepeat என்ற ஸ்லோகனை டோனியைப் புகழ ஐசிசி பயன்படுத்தியுள்ளது.
அதனால், எங்களுடைய ராயல்டியை ரொக்கப் பணம், காசோலை மற்றும் பங்குகளாக செலுத்தலாம்” என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஐசிசி, “உங்களுக்கும், ப்ரோக் லெஸ்னருக்கு உலகக் கோப்பை தொடரைப் பார்ப்பதற்கான டிக்கெட் வழங்கிறோம்” எனக் கூறியிருந்தது. இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (ஜன.28) நடைபெறும் WWE ராயல் ரம்பிள் போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோனியைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களான என WWE தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளது. இதற்கு ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள், பதிலளித்து வருகின்றனர்.
___________
மே.இ.தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. 2-ம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30.2 ஓவரில் 77 ரன்னுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ரன் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரோச் 11 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
212 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி இதுவரை 339 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வலுவான நிலையில் உள்ளது.
____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.