முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் அணை உடைந்து 7 பேர் பலி: 150 பேர் மாயம்

சனிக்கிழமை, 26 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

பிரேசிலியா : பிரேசிலில் அணை உடைந்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பிரேசில் நாட்டில் உள்ள புரு மாடின்கோ நகரம் அருகே ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்புத் தாது சுரங்கம் உள்ளது. அங்கு ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த அணை உடைந்தது. உடனே அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இச்சம்பவத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 150 பேரை காணவில்லை. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து