எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தொழில் வளர்ச்சியில் தமிழகம் பீடு நடைபோடுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டு கூடுதலாக 56 சதவிகிதம் வந்துள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தொழில் முதலீட்டுக்கு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு 6-ம் இடத்தில் இருந்தது. இப்போது அது 2-ம் இடத்துக்கு வந்துள்ளது என்றும் முதல்வர் கூறினார்.
சாதகமான சூழ்நிலை...
ஸ்ரீபெரும்புதூர் அருகே செயிண்ட் கோபைன் நிறுவனத்தின் 3-வது மிதவை கண்ணாடி ஆலையையும், மற்றும் 2 தொழிற்சாலைகளையும் முதல்வர் துவக்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
தொழில்நுட்ப அனுபவத்துடன் கூடிய மனித வளம், தடையில்லா மின்சாரம், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், சிறப்பான சட்ட ஒழுங்கு பராமரிப்பு, வெளிப்படையான மற்றும் எளிமையான அணுகுமுறை போன்ற தொழில் தொடங்கத் தேவையான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் அம்மாவின் அரசால் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தியை பெருக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், தமிழ்நாட்டை முதலீட்டுக்கு உகந்த தேர்விடமாக உருவாக்கவும், அம்மாவின் அரசு ஆக்கபூர்வமான கொள்கைகளை வெளியிடுதல், திட்டமிடுதல் மற்றும் அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
30 நாட்களுக்குள் அனுமதி
முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு, 30 நாட்களுக்குள் ஒற்றைச்சாளர முறையில் வேண்டிய அனுமதிகள் வழங்கப்படுவதை 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் உறுதி செய்கிறது. 30 நாட்களுக்கு மேலாகும் பட்சத்தில், தானாகவே அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படும் ஷரத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதிய தொழில் தொடங்க தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை சமீபத்தில் அம்மாவின் அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
2 வது பெரிய பொருளாதார மாநிலம்
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒரு முன்னணி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து ரிசர்வ் வங்கி சமர்ப்பித்த அறிக்கையில் தமிழ்நாட்டில் 2017-18ம் ஆண்டில் கூடுதலாக 56 சதவீதம் முதலீடு பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முதலீட்டிற்கு சிறந்த மாநிலமாக சென்ற ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து, 2018ம் ஆண்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பீடுநடை போடுகிறது என்பதை இந்த அறிக்கைகள் உறுதி செய்கின்றன.
தொழில் முதலீட்டாளர் மாநாடு வெற்றி
சென்ற வாரம் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மாவின் அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என்பதை இங்கே பெருமிதத்துடன் குறிப்பிட விரும்புகிறேன். இதன் காரணமாக, இன்றைய தினம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளும், சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் கோபைன் நிறுவனம் 1665ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக கண்ணாடி தொழில்நுட்பத்தில் தொடர்ந்து உலகளவில் ஓர் சிறந்த முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது.“The Customer is King” அதாவது, வாடிக்கையாளரே மன்னர்” என்ற கூற்று செயின்ட் கோபைன் நிறுவனத்திற்கு மிகப் பொருத்தமாக உள்ளது.
இதுவரை ரூ.3,400 கோடி முதலீடு
செயின்ட் கோபைன் நிறுவனம் தமிழ்நாட்டுடன் இதுவரை நான்கு ஒப்பந்தங்களில் பல்வேறு கட்டங்களில் கையொப்பமிட்டு, அதன்மூலம் இதுவரை 3,400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் தனது மூன்றாவது மிதவை கண்ணாடி தொழிற்சாலையை 800 கோடி ரூபாய் முதலீட்டில் 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, அம்மாவின் அரசின் ஒத்துழைப்புடன் மூன்றாண்டு காலத்திற்குள்ளேயே அந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இதனை நான் இன்று (நேற்று) துவக்கி வைத்துள்ளேன்.
மழை நீர் சேகரிப்பு
அம்மாவின் ஆணையை ஏற்று இந்த நிறுவனம் இயற்கை வளம் காத்தல், மழைநீர் சேகரிப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்தியதை அம்மா அந்த நிகழ்ச்சியில் பாராட்டினார். மேலும், செயிண்ட் கோபைன் நிறுவனம் வளர்ச்சியடைய பலவித ஆலோசனைகளையும் அந்நிகழ்ச்சியில் வழங்கினார் என்பது, நமது அம்மா தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையை தெளிவாக காட்டுகின்றது. சென்னை தரமணியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 110 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுரஅடி பரப்பில் அமைந்துள்ள செயிண்ட் கோபைன் ஆராய்ச்சி (இந்தியா) மையத்தை அம்மா 29.1.2016 அன்று துவக்கி வைத்தார் என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
பன்னாட்டு முதலீடுகள் தமிழகத்தில் அதிகம்
மேலும், இந்த நிறுவனம் தனது பன்னாட்டு முதலீடுகளில் அதிக அளவில் தமிழ்நாட்டில் தான் செய்துள்ளது என்பதை அறிவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சென்ற வாரம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், மேலும் 720 கோடி ரூபாயினை தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில் செயிண்ட் கோபைன் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது என்பதை அறிவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எவ்வாறு இந்நிறுவனம் செயல்படுத்தியதோ, அதே போன்று, தற்போது அம்மாவின் அரசு 1.1.2019 முதல் அறிவித்திருக்கிற பிளாஸ்டிக் தடை அறிவிப்பினையும் முழுமையாக செயல்படுத்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.