எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், -கழக ஆட்சியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் போன்று தி.மு.க. ஆட்சியில் கொண்டு வர முடிந்ததா?
என ஸ்டாலினுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சாட்டையடி கொடுத்து பேசினார்.
திண்டுக்கல்லில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாள் விழா கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் மாநகராட்சி முதல் மேயருமான வி.மருதராஜ் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் ஜெயசீலன், மாவட்ட பேரவை செயலாளர் வி.டி.ராஜன். அபிராமி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான பாரதிமுருகன் ஆகியோர் வரவேற்றனர். தலைமைக்கழக பேச்சாளர் நடிகை வாசுகி, பேட்ரிக் வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், புரட்சித் தலைவி அம்மா மறைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அவரது மறைவிற்குப் பின்னர் கழகத்திற்கும் ஆட்சிக்கும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அரசியல் இடையூறு செய்தனர். கட்சியை பிளவுபடுத்த பார்த்தனர். ஆனால் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதனை முறியடித்து சீரும் சிறப்புமாக அம்மா வழியில் ஆட்சி புரிந்து வருகின்றனர்.
6 மாதத்தில் கழக ஆட்சி கலைந்து விடும் என டி.டி.வி. தினகரன் கூறினார். அம்மா மறைவிற்குப் பின் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி விடலாம் என நினைத்தார். மேலும் பொதுச் செயலாளர் பதவியையும் கைப்பற்ற நினைத்தார். ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேற வில்லை. தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து இரட்டை இலை சின்னத்தையும் முடக்கப் பார்த்தனர். குக்கர் சின்னம் எதிர்பார்த்தனர். அதுவும் கிடைக்க வில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன நிலையாக அக்கட்சி உள்ளது. முற்றிலும் செயல்படாத நிலையில் அக்கட்சி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அ.தி.மு.க. தயாராக இருந்தது. ஆனால் தி.மு.க. நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு வாங்கியது. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் சிறு சிறு அடிப்படை வசதிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளே செய்து முடித்திருப்பர். மாறாக எம்.எல்.ஏ.க்களும் எம்.பிக்களும் அமைச்சர்களும் தான் அந்த சிறு சிறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் போனதற்கு தி.மு.க.வே காரணம்.
கூட்டுறவு தேர்தல் வர இருந்தது. அதற்கும் தடை உத்தரவு வாங்கி விட்டனர். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால் பல கட்சி தலைவர்கள் அதற்கு உடன்பட வில்லை. மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மம்தா பானர்ஜி கல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ராகுல் காந்தியை பற்றி பேசவே இல்லை. அங்கு வங்காள மொழியில் பேசி மக்களை கவர்ந்து விடலாம் என அவர் நினைத்தது செல்லாக்காசாகி விட்டது. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்காக லோக் ஆயுக்தா சட்டத்தை கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்டு வந்தனர். இதற்கான நீதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஸ்டாலினை அழைத்த போது அவர் ஏன் கலந்து கொள்ள வில்லை. கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர். இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது 25க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்குகள் உள்ளது. பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள் அவர்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒற்றைக்கண் சிவராசன் படத்தை அம்மாவுடன் இருப்பது போல் கருணாநிதி வெளியிட்டார். அதனை சட்டமன்றத்தில் அம்மா துகிலுரித்து காட்டிய போது கருணாநிதி மன்னிப்பு கேட்கவில்லை. அவர் வழியில் வந்த ஸ்டாலினும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சாதிக்பாட்சா, அண்ணா நகர் ரமேஷ் கொலைவழக்கு என்ன ஆனது. சி.பி.ஐ. விசாரணைக்கு தயாரா? கருணாநிதியும் தி.மு.க.வும் விஷ ஜந்து என தமிழக மக்கள் ஏற்கனவே திட்டவட்டமாக முடிவு செய்து விட்டனர். இவர்கள் என்ன கூறினாலும் அதனை தமிழக மக்கள் ஏற்கப் போவதில்லை.
ஸ்டாலின் முன்னர் நமக்கு நாமே என நடைபயணம் செய்தார். இப்போது கிராமசபைக் கூட்டம் நடத்துகிறார். இவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்தித்தாரா? குறைகளை கேட்டாரா? கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 பணம் வழங்கினர். இது மக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தி.மு.க.வினரும் கூட மகிழ்வுடன் அப்பணத்தை வாங்கி சென்றனர். மக்களின் வரிப்பணம் மக்களுக்கே திரும்பி வழங்கி உள்ளோம். தி.மு.க. ஆட்சியில் ஏன் பொங்கல் பரிசு வழங்கப்பட வில்லை. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு 3 லட்சத்து 44 ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இருந்து வந்திருந்த முதலீட்டாளர்கள் இம்மாநாட்டைக் கண்டு தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டினர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடும் தொழில் தொடங்குவதற்கு தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என பாராட்டி சென்றார். தி.மு.க ஆட்சியில் இத்திட்டத்தை கொண்டு வர முடிந்ததா? அம்மா உணவகத்தின் மூலம் குறைந்த செலவில் நிறைவான சாப்பாடு வழங்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா?
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு பிரசவத்தின் போது அம்மா ரூ.6 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கி அதனை ரூ.12 ஆயிரமாக உயர்த்தினார். தற்போது கழக அரசு ரூ.18 ஆயிரமாக வழங்கி வருகிறது. அதோடு ரூ.1000 மதிப்பிலான பரிசு பெட்டகமும் வழங்கப்படுகிறது. பிரசவம் முடிந்தவுடன் வீடு திரும்புவதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசாக வேட்டி சேலை, ரூ.484 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. கட்சி பாகுபாடின்றி இது அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 100 யூனிட் மின்சாரம் இலவசம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். இதுபோன்று எண்ணற்ற நலத்திட்டங்களை கழக அரசு அமல்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாகவும் முன்னோடி மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.
ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா முயற்சியின் காரணமாக பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது மதுரையில் ரூ.2600கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழக ஆட்சியினால் எண்ணற்ற நலத்திட்டங்களை பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நல் ஆட்சிக்கு தமிழக மக்கள் பேராதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் திவான்பாட்சா, இணை செயலாளர் ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் மனோகரன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பழனிசாமி, அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், கொடைக்கானல் நகர செயலாளர் ஸ்ரீதர், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.