முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். பயங்கரவாத அமைப்புகளால் இந்தியாவில் தாக்குதல் தொடரும்- அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

புதன்கிழமை, 30 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும் சவால்கள்...

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் ஜூலையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தலிபான்களின் பெரும் தாக்குதல் காரணமாகவும் தெற்கு ஆசியாவில் பெரும் சவால்கள் 2019-ல் இருக்கும் என கூறினார்.

பாதிப்பை உண்டாக்கும்...

அமெரிக்காவின் உளவுத்துறை செனட் கமிட்டி உறுப்பினர்களிடம் டான் கோட்ஸ் தெரிவித்துள்ள தகவலில்,  பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் குறுகிய எண்ணத்துடன் செயல்படுவதாலும்,  பயங்கரவாத அமைப்புகளை தன்னுடைய கொள்கை முடிவுகளின் ஆயுதங்களாக பயன்படுத்துவதாலும் பயங்கரவாத அமைப்புகளின் எச்சரிக்கை நேரடியாகவே உள்ளது. பாகிஸ்தானின் இதுபோன்ற செயல்பாடு பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பாதிப்பை உண்டாக்கும்.

தாக்குதலை நடத்தும்...

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பது அவை பாதுகாப்பு புகலிடங்களை விஸ்தரிக்க வகை செய்கிறது. இந்த பயங்கரவாத இயக்கங்கள் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தும். அமெரிக்காவுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து