முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, அடுத்த கல்வியாண்டு முதல் மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு படத்திற்கு சேர்த்து 12 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஏற்றுக்கொள்ளும்....

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு சார்பாக ஆசிரியர்களின் கருத்தரங்கு நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “பொறியியல் படித்தவர்கள் 80 லட்சம் பேர் இன்று இந்தியா முழுவதும் வேலையில்லாமல் உள்ளனர். 1,68,000 பேர் தமிழகத்தில் பொறியியல் முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து கூறும் பட்சத்தில் அதை தமிழக அரசு தலைவணங்கி ஏற்றுக்கொள்ளும்.

புதிய பாடத்திட்டம்

256 பாடப்பிரிவுகள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மாணவர்கள் இதை படித்தாலே போதும்எத்தகைய தேர்வாக இருந்தாலும், மாணவர்கள் அதை எளிதில் வெல்லமுடியும்.  மாணவர்கள் படிப்போடு சேர்த்து மரம் வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு படத்திற்கு சேர்த்து 12 மதிப்பெண்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்” என்று கூறினார்.

நடவடிக்கை உறுதி...

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர தமிழக அரசின் சார்பில் அயல்நாடுகளுக்கு குழுக்கள் அனுப்பி அங்குள்ள கல்வி முறை பற்றி அறியப்படுகிறது. ஆசிரியர் தேர்வில் தவறு, முறைகேடு நடந்திருப்பது உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை பல்வேறு இடங்களில் தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துகிறார்கள். அதேபோன்ற சோதனையே டி.பி.ஐ. வளாகத்திலும் நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து