முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் முதல் முறையாக ஸ்மார்ட் பின் பயன்பாட்டை முதல்வர் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் முதல் முறையாக ஸ்மார்ட்பின் (ரிவர்ஸ் வென்டிங் மெஷின்) பயன்பாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.

அரசாணை வெளியீடு...

"பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" உருவாக்கிட தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பயன்படுத்த தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களுக்கான பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகமாக உள்ளது. பயன்படுத்தப்பட்ட இந்த பாட்டில்களை பொது இடங்களில் தூக்கி எறியப்படுவதால், அவைகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. அதனால் பல்வேறு விதமான நோய்கள் உருவாகி வருவதுடன், மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்களில் அடைப்பை உண்டாக்கி சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

விழிப்புணர்வை...

எனவே, சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கவும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பெரும் வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், திரையரங்குளில் நவீன இயந்திர பயன்பாடு (ஸ்மார்ட் பின்) என்ற அடிப்படையில் சென்னையில் முதன்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நவீன இயந்திரத்தில் போடப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான அலுமினிய டின்கள் ஆகியவை நசுக்கப்பட்டு சேகரிக்கப்படும்.

சலுகை கூப்பன்கள்...

மேலும், அவ்வாறுபோடப்படும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் குளிர்பான அலுமினிய டின்களுக்கு இந்த இயந்திரம் மூலமாக சலுகை கூப்பன்கள் வழங்கப்படும். இந்த சலுகை கூப்பன்களைக் கொண்டு மக்கள் அதில் குறிப்பிட்டுள்ள வணிக நிறுவனங்களில் பொருட்களை சலுகை விலையில் வாங்கி பயன்பெறலாம்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் சேகர், கோல்டன் ஸ்டார் இன்னொவெஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் அமலன் சாம்ராஜ், இணை - நிறுவனர் உத்சவ் சஹ்னி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் . ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து