முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிப்பொழிவு மீது மோதி விமான விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பிய 201 பயணிகள்

வெள்ளிக்கிழமை, 1 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

டோக்கியோ, டெல்லியிலிருந்து புறப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று டோக்கியோவில் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையிலிருந்த பனிப்பொழிவுளை தகர்த்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கசுஹியோ மரியோ ஏஎப்பியிடம் தெரிவித்த விவரம் வருமாறு:-

டெல்லியிலிருந்து வந்த போயிங் 787 ஜெட் விமானம் டோக்கியோ நாரிட்டா விமான நிலையத்தில்,நேற்று காலை ஓடுபாதையிலிருந்த பனிப்பொழிவுளை தகர்த்துச்சென்று விபத்துக்குள்ளானது. எனினும் அதிர்ஷ்டவசமாக அதில்வந்த 201 பயணிகளும் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் உயிர் தப்பினர். யாருக்கும் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை.

இவ்விபத்து விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளில் ஒன்றை மூடும் நிலைக்கு தள்ளியது. விமானம் பாதுகாப்பு பிராந்தியத்தைக் கடந்து ஓடியதாலேயே விமான ஓடுபாதை மூடவேண்டியே நிலை ஏற்பட்டது.விபத்துக்கு காரணம் உடனடியாக தெரியவில்லை ஆனால் என்எச்கே பொது வானொலி தெரிவிக்கையில், விமானத்தின் டயர்கள் ஓடுபாதையோடு ஒட்டியிருந்த அரிதான பனிப்பொழிவுகள் மீது சற்றே இடறியதே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.இவ்வாறு விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து