முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூங்கும் போதுகூட என்னைப் பற்றியே சிந்திக்கிறார்: போராட்டத்தை தூண்டி சட்டம் - ஒழுங்கை கெடுக்க சூழ்ச்சி செய்கிறார் மு.க.ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 2 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பல்வேறு திட்டங்கள்...

சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில் புதிய சாலை மேம்பாலம் மற்றும் உயர்மட்டப் பாலத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

அம்மா முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். திருமண உதவித் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் 48,975 பேருக்கு கிட்டத்தட்ட 237.50 கிலோ தங்கம் கொடுத்திருக்கிறோம். இதற்காக 1,74 கோடியே 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 8 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.12-ம் வகுப்பு பயின்ற 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 237.25 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிக்கணினி கொடுத்திருக்கிறோம்.

விமர்சனம் செய்கிறார்...

கிராமசபை கூட்டம் ஏற்கனவே அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பஞ்சாயத்தில் உட்கார்ந்து கொண்டு கிராமசபை கூட்டம் என்று, இவர் தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி பேசும்பொழுது, பல்வேறு குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்துகிறார். இந்த ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்கிறார். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டி கூறிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோ, அதை அவர் நடைமுறைப்படுத்தி வந்தார். அதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அவருடைய அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்து மக்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நிறுத்த முடியாத அளவு...

அதைப் பொறுக்க முடியாத மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை கூட்டி  பேசுகின்ற பொழுது, கிராமம் தான் கோயில் என்று பேசுகிறார். இது ஏற்கனவே நமக்குத் தெரியும். நானெல்லாம் கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவன். அவர் நகரத்தில் இருந்ததால், கிராமம் ஒரு கோயில் என்று இப்பொழுதுதான் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார். அவரது புது கண்டுபிடிப்பிற்கு, கின்னஸ் சாதனை கிடைத்தது மாதிரி, அவர் அந்த சாதனையை படைத்திருக்கிறார். கிராமத்தில் இருக்கிற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்பதற்காகத் தான் ஜெயலலிதா திட்டங்களை அறிவித்திருக்கிறார். கிராமத்தில், ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த திருமண உதவித் திட்டம் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யார் ஆட்சிக்கு வந்தாலும்,ஜெயலலிதா கொடுத்த திட்டத்தை எவராலும் நிறுத்த முடியாத அளவிற்கு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் சூழ்ச்சி...

மகளிர் சுய உதவிக் குழு, எந்த சுய உதவிக் குழுவுக்கும் கடன் கொடுக்கவில்லை என்று ஸ்டாலின் கூறினார். அவருக்கு புள்ளி விவரங்கள் தெரியாது. எப்பொழுதும் என்னை பற்றிய நினைப்பு தான் இருக்கிறது. தூங்கும் போதுகூட என்னை நினைத்துக் கொண்டுதான் தூங்குவார் என்று நினைக்கிறேன். எப்பொழுது இந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சரிலிருந்து அகற்ற வேண்டும். அந்த முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு எவ்வித தில்லுமுல்லு செய்யணும், எவ்வித சூழ்ச்சி செய்யணும், யார் யாரையெல்லாம் போராடுவதற்கு தூண்டி விடணும், இந்த நாட்டிலே எப்படியெல்லாம் சட்டம், ஒழுங்கு சீர்குலைவதற்கு என்னென்ன சூழ்ச்சி வேண்டுமோ அத்தனையையும் செய்து கொண்டிருக்கிறார். அத்தனையையும் மக்களுடைய ஆதரவோடு முறியடிக்கப்பட்ட ஆட்சி அம்மாவின் ஆட்சி.

தெரிந்து கொண்டு பேச...

மகளிர் சுய உதவிக் குழுவிற்கு எதுவும் கொடுக்கவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். இன்று சேலம் மாவட்டத்தில் மட்டும் 73,796 மகளிர்சுய உதவிக் குழுவிற்கு 1,874 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான பேர் இந்த சுய உதவிக் குழு மூலம் கடன் பெற்று, சுயமாக தொழில் துவங்கக் கூடிய மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சேலம் மாவட்டம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுவிற்கு தேவையான நிதி வழங்கப்படுகிறது, தேவையான மானியமும் வழங்கப்படுகிறது. அதைக் தெரிந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பேசவேண்டுமென்று என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து