முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் பதவிக்கு ராகுல் தகுதியானவர்: லல்லு மகன் தேஜஸ்வி யாதவ் கருத்து

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.ஜே.டி தலைவர் லல்லுவின் மகனும் அந்த கட்சியின் மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.கூட்டத்தில் அவர் பேசியபோது,

"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர். பிரதமருக்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. எனினும் கூட்டணி ஆட்சியின்போது பிராந்திய கட்சிகளுக்கும் சமஉரிமை வழங்க வேண்டியது அவசியம்" என்று தெரிவித்தார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. எனினும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் உரிய மரியாதை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து