முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. இயக்குநராகப் பதவி ஏற்றார் ரிஷி குமார் ஷுக்லா

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பலத்த சர்ச்சைகளுக்கிடையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சி.பி.ஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லா, நேற்று காலை பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

முன்னதாக, 30 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் இருந்து பிரதமர் தலைமையிலான கமிட்டி ஷுக்லாவைத் தேர்வு செய்தது.ஊழல் புகார் காரணமாக சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார். தன்னைக் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டை  நாடினார். நீதிமன்றம் அவரை மீண்டும் சி.பி.ஐ இயக்குநராக நியமித்தது.அலோக் வர்மா குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை தேர்வுக்குழுவுக்கு வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மோடி தலைமையிலான தேர்வுக்குழு அவரை அதிரடியாக நீக்கியது. அதனைத் தொடர்ந்து சி.பி.ஐ இயக்குநரை நியமிப்பதில் அரசு காலதாமதம் செய்தது. இதனை சுப்ரீம் கோர்ட் கண்டித்ததை அடுத்து, ரிஷி குமார் ஷுக்லா சி.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.ரிஷி குமார் ஷுக்லா 1983-ம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச முன்னாள் டி.ஜி.பி.யாக இருந்தவர். சாகரைச் சேர்ந்த ஷுக்லா, சி.பி.ஐ இயக்குநராவதற்கு முன்பு மத்தியப்பிரதேச போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் சேர்மனாகப் பணியாற்றி வந்தார்.இவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து