முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்ட சபையில் கடும் அமளி: கவர்னர் உரை பாதியில் நின்றது

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடக சட்ட சபையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - ம.ஜ.த.கூட்டணி அரசுக்கு எதிராக‌ பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த கவர்னர் வஜூபாய் வாலா தனது உரையை பாதியில் நிறுத்திவிட்டு, அவையில் இருந்து வெளியேறினார்.

கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்  பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் தொடங்கியது. கவர்னர் வஜூபாய் வாலா தனது உரையை தொடங்கியதும், அவையில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து கோஷமிட்டனர். மேலும், அவையின் மைய பகுதிக்கு வந்த பா.ஜ.க. உறுப்பினர்கள் 104 பேரும், காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அப்போது அரசுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்றும், எனவே, அரசை கலைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.இதனால் அதிருப்தி அடைந்த கவர்னர் வஜூபாய் வாலா, தனது உரையை பாதியிலே நிறுத்திவிட்டு, அவையை விட்டு வெளியேறினார்.இதனிடையே, பா.ஜ.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை முற்றிலுமாக முடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து