முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை காமராசர் பல்கலை.யில் தமிழியல்துறை சார்பில் ஆய்வு மாணவர்களுக்கான 2 - நாள் தேசியப் பயிலரங்கம்

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை காமராசர் பல்கலைக்கழக  தமிழியல்துறை ஒருங்கிணைப்பின்கீழ், மதுரை காமராசர் பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மையம், முசிறி கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி, ஹூஸ்டன் தமிழ் இருக்கை - அமெரிக்கா , தேனித் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர்ப்பட்ட மாணவர்கள், முனைவர்ப்பட்ட மேலாய்வாளர்கள் தங்களின் ஆய்வுத் திறனை  வளர்த்து கொள்ளும் வகையில் ஆராய்ச்சி நெறிமுறைகள், தமிழ் ஆராய்ச்சியின் வரலாறும் வளர்ச்சியும் என்னும் பொருளில், இரண்டுநாள் தேசியப் பயிலரங்கத் தொடக்க விழா, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியற்புலச் சேதுபதி அரங்கில் நடைபெற்றது.
இந்த பயிலரங்கிற்கு பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தலைவர் வை.இராமராசபாண்டியன் தலைமை வகித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவரும்,பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்றார்.
நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மைய துணை இயக்குநர் பேராசிரியர் செ.முருகேசன், பயிலரங்க அறிமுகவுரையாற்றினார். கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அரு.மருததுரை பயிலரங்கைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
பயிலரங்கில் அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழக ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கையின் இயக்குனர் பிரபுரங்கராசு, மலேசியா பினாங்கு மாநில காவல் ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ் பாலகிருஷ்ணன், லோகநாதன்கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இரண்டுநாள் பயிலரங்கில் திருச்சிராப்பள்ளி  தனலெட்சுமி கல்லூரித் தமிழ் உயராய்வு மைய இணைப்பேராசிரியர்கள் இ.ஆர்.இரவிச்சந்திரன், முனைவர் ந.விஜயசுந்தரி,மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் து.முத்துக்குமார், முனைவர் ம.எழில்பரமகுரு, மதுரைகாமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முனைவர் பெ.சுமதி, முனைவர் ந.இரகுதேவன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெ. இளையாப்பிள்ளை கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி உதவிப்பேராசிரியரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ப.பூஞ்சோலை மற்றும் பலர் சிறப்புஅழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
விழாவில் தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மு.சுப்பிரமணியன், பொருளர் ம.கவிக்கருப்பையாஆகியேர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் அமெரிக்கா வி.சாலினி, தமிழகத்தின் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இருந்து 80 - க்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டனர். திருச்சி கச்சியப்ப முனிவர் தமிழியல் கல்லூரி உதவிப்பேராசிரியரும்நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ப.பூஞ்சோலை நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து