முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்:குமாரசாமி

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று பா.ஜனதாவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம்  தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம்  நடந்த 2-வது நாள் கூட்டத்தில், கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் அமளி ஏற்பட்டு சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள். சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்தால், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி தர்ணா நடத்துகிறார்கள். தர்ணா நடத்துவதற்கு பதிலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா கொண்டுவர வேண்டும்.  இவ்வாறு குமாரசாமி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து