முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிம் இடையேயான சந்திப்பு ஹனோய் நகரில் நடைபெறும்: அதிபர் டிரம்ப்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வியட்நாமின் ஹனோய் நகரில் வடகொரிய அதிபருடன் சந்திப்பு நடைபெற இருப்பதாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது. இதற்கு தீர்வுகாண 2 - வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வியட்நாமில் நடைபெறுகிறது. வியட்நாமின் ஹனோய் நகரில் சந்திப்பு நடைபெற இருப்பதாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து