முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை :  ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் மற்றும் துணைமுதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் மனிதநேய ஜனநாயக பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேசுகையில், மத்திய அரசு 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படும். இடை நிற்றல் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் இது தமிழக அரசின் கொள்கை முடிவு. இது குறித்து முதல்வருடனும், துணைமுதல்வருடனும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து இப்போது எதுவும் கூற இயலாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து