முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தினோம் - இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “நாங்கள் ஒவ்வொரு நாளும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். ஈரானை ஒட்டிய சிரிய பகுதிகளில் நாங்கள் வான்வழித் தாக்குதலை நடத்தினோம். நேற்று (நேற்று முன்தினம்) கூட வான்வழித் தாக்குதலை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இஸ்ரேல் படைகள் சிரியா மீது தாக்குதல் நடத்தியதாக சிரியப் படைகள் திங்கட்கிழமை தெரிவித்தன.

உள்நாட்டுப் போர் 

இதற்கு முன்னரும் இஸ்ரேல் தங்கள் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியதாக சிரியா கடந்த டிசம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தது. இந் நிலையில் தற்போது முதல் முறையாக வான்வழித் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும்,  ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக  உள்நாட்டுப் போர்  நடந்து வருகிறது.

இடம்பெயர்ந்தனர்...

இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து