முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க, அ.ம.மு.க தவிர்த்த மற்ற கட்சிகளுடன் அ.தி.மு.க. பேசி வருவதாகவும், விரைவில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வாழ்த்து...

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் செந்தில்வேல்குமார், 15 மணி நேரம் இடைவெளி விடாமல் பந்து வீசும் சாதனை முயற்சியை தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இதே மாணவர் 10 மணி நேரம் இடைவிடாமல் பந்து வீசி சாதனை படைத்தார். முந்தைய சாதனையை முறியடிக்கும் நோக்கில், மாநில கல்லூரியின் மைதானத்தில்  செந்தில் வேல்குமார் பந்து வீசி வருகிறார். இவரை நேரில் சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்தினார். பின்னர், பேட்டிங் செய்து செந்தில்வேல்குமார் வீசிய பந்துகளை பறக்க வைத்தார்.

விரைவில் முடிவு...

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், "பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதாகவும், இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும்" என்று முரளிதர ராவ் கூறியிருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், அது முரளிதர ராவின் தனிப்பட்ட கருத்து என்றார். கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை விரைவில் முடிவு எடுக்கும் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து