முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தாக்குதல்: யோகேஸ்வர் ஆவேசம்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

சிஆர்பிஎப் வீரர்கள் 45 பேர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஆதில் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினார். இதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள யோகேஸ்வர் தத், ''புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். நடந்த சம்பவத்தை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவர்களைப் பழிதீர்க்க முடியும். அந்த பதிலடி, ஒரு மனிதன் தீவிரவாதியாக உருமாறுவதற்கு முன் அவனை ஆயிரம் தடவை யோசிக்க வைக்க வேண்டும். இதுபோன்ற உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

தீவிரவாதத்தை எந்த இந்தியனாவது ஆதரித்தால், அவனைச் சுட்டுத்தள்ள வேண்டும். இதுதான் ஒரே தீர்வு. வன்முறையை வன்முறை மூலமே தீர்க்க முடியும். தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி'' என்று தெரிவித்துள்ளார் யோகேஸ்வர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து