முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டனில் மீண்டும் உயிர்பெற்று வரும் அபாயகரமான தீவிரவாத அமைப்பு - நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இஸ்லாமிக் ஸ்டேட் ஆன ஐ.எஸ். என்ற அமைப்புக்கு ஆதரவு கோரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத பிரச்சாரகரின் வலைப்பின்னல் மீண்டும் எழுச்சியடைந்துள்ளது என்று பயங்கரவாத ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தீவிரவாத பிரச்சாரகர் அஞ்ஜெம் சவுத்ரி பிரிட்டனில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் கடந்த அக்டோபரில் கடும் கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 51 வயதாகும் இவர் தொடங்கிய அமைப்புதான் அல்-முஹாஜிரூன் வலைப்பின்னலாகும். இந்திய வம்சாவளி ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் சித்தார்த்த தார், அபு ருமாய்ஷா ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் அஞ்ஜெம் சவுத்ரி.

இந்நிலையில் ‘ஹோப் நாட் ஹேட்’ என்ற தீவிரவாத எதிர்ப்பு குழு தன்னுடைய எச்சரிக்கையில், அல்-முஹாஜிரூன் அமைப்பு மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கடும் எச்சரிக்கையுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், ஆங்காங்கே அவர்கள் மீண்டும் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

இது முன்பு இருந்தது போன்று வலுவாக இல்லாவிட்டாலும் அல்-முஹாஜிரூன் இன்றும் கூட மிகப்பெரிய அழிவு சக்தியாகும் ஆற்றல்களைக் கொண்டது போலவே உள்ளது. என்று எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து