முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்- அமிதாப்பச்சன்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க போவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர்   கூறியதாவது:

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பங்களுக்கு அமிதாப் பச்சன் தலா ரூ.5 லட்சத்தை வழங்கவுள்ளார். இந்த தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் விரைவாக வழங்குவது குறித்து பல்வேறு மாநிலங்களின் அரசு வட்டாரங்களிடம் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறக்கட்டளை நிகழ்ச்சியில் அமிபாத் பச்சன் கடந்த வியாழக்கிழமை கலந்து கொள்ள இருந்தார். ஆனால், தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பான செய்தி குறித்து அறிந்ததும் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அவர் வீடு திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து