முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு இன்னும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது: அகிலேஷ் கேள்வி

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் இறந்து மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்த பிறகும் மவுனம் ஏன், இன்னும் அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் இறந்து மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்தபிறகும் ஏன் இன்னும்மௌனம் நீடிக்கிறது. ஒவ்வொருநாளும் வீரத் தியாகிகளின் இறுதி ஊர்வலங்களுடன் பா.ஜ.க அரசியல்வாதிகள் வரும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவோடு சேர்த்து புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் ஒரு மேஜர் உள்பட  சுட்டுக்கொலை என்ற செய்தி டேக் செய்யப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து