முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்சிட் விவகாரம்- தொழிலாளர் கட்சியில் இருந்து விலகிய 7 எம்.பி.க்கள் - தனியாக செயல்பட முடிவு

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரெக்சிட் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்த தொழிலாளர் கட்சி எம்பிக்கள் 7 பேர் கட்சியில் இருந்து வெளியேறினர்.  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு (பிரெக்சிட்) மார்ச் 29-ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் திடீரென கட்சியில் இருந்து விலகினர். பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும், இனி தனி அணியாக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். முக்கிய எம்.பி.க்கள் விலகியிருப்பது தொழிலாளர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து