முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியா நினைத்தால், நாங்களும் திருப்பி அடிப்போம்: இம்ரான்கான் திமிர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லும் இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக தண்டிக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  கருத்து தெரிவித்துள்ளார்.

எங்கள் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்பக் கூடாது என்பதில் நாங்கள் அக்கறை காட்டி வருகிறோம். பாகிஸ்தானில் இருக்கும் யாருக்காவது தொடர்பு இருப்பதற்குண்டான ஆதாரம் இந்தியாவிடம் இருந்தால், அதை எங்களுக்கு அளித்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம். நாங்கள் எதிர்தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இந்தியா நினைத்தால், நாங்களும் திருப்பி அடிப்போம். போரை தொடங்குவது மனிதர்கள் கையில் உள்ளது, ஆனால், அது எங்கே போய் முடியும்? என்பது கடவுளுக்குத்தான் தெரியும். இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து