எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல்,- அம்மாவி;ன் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் அதன் அன்பை தமிழக மக்கள் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதிபட பேசினார்.
திண்டுக்கல் மண்டலம் சார்பில் மாவட்ட கழக புரட்சித் தலைவி அம்மா போவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் கழக புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. தி;ண்டுக்கல் மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் வரவேற்றார். தேனி மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பி.ரவீந்திரநாத் குமார், கரூர் மாவட்ட செயலாளர் காமராஜ். திருச்சி மாவட்ட பேரவை செயலாளர் கிருஸ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.விசுவநாதன், கழக செய்தி தொடர்பாளர் அழகு மருதராஜ், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி பரமசிவம், மாநில அம்மா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், தேனி மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் பி.ரவீந்திரநாத் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் பேசுகையில் எந்த கட்சி கூட்டம் ஆனாலும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை கூட்டம் என்றாலே அது மாநாடு தான். கழகத்தின் கொள்கையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்வதில் புரட்சி தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டு வருகின்றனர் அதன் வரிசையில் வருகின்ற எந்த தேர்தல் ஆகட்டும் கழகம் மகத்தான வெற்றியைப் பெற்று அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பதே நமது கடமை என்ற உணர்வோடு செயல்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. அம்மா சொல்வதை போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. துரோகிகள் தான் உள்ளனர் அவர்களை விரட்டி விரட்டி அடிக்கும் பணியை பேரவை நிர்வாகிகள் திறம்பட செயல்பட வேண்டும் என்று பேசினார்.
கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. விசுவநாதன் பேசுகையில் மாநில பேரவை செயலாளர் உதயகுமார் திறம்பட செயலாற்றி வருகின்றார் கழகத்தின் கொள்கையும் கட்சியின் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டு செல்வதில் திறம்பட பணியாற்றி வருகின்றார் .மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை கூட்டம் என்றாலே எழுச்சி இருக்கும். அமைச்சர் உதயகுமார் மாணவரணி செயலாளராக திறம்பட பணியாற்றியதால் புரட்சித்தலைவி அம்மா கழக இளைஞரணி செயலாளராக அமர வைத்தார். அதிலும் முத்தாய்ப்பாக திறம்பட செயலாற்றினார்.அவரது திறமை முழுவதுமாக கழகத்திற்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே கழக அம்மா பேரவை செயலாளராக புரட்சித்தலைவி அம்மா அமரவைத்தார். மாநில பேரவை செயலாளராக உதயகுமார் நியமித்தது முதல் பேரவை நிர்வாகிகளை அவர் திறம்பட வழிநடத்தி சிறப்பாக செயல்படுகின்றார். கழக ஆட்சியை குறை சொல்ல யாருக்கும் தகுதியும் கிடையாது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்யையும்இ புரட்சித்தலைவி அம்மாவையும் விமர்சனம் செய்யாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் விமர்சனம் செய்தோடு காணாமல் போய்விட்டார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்இ புரட்சித்தலைவி அம்மா இருக்கும்வரை அவர்களால் முதல்வராக முடியாமல் போனது. கழக தெய்வங்களின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறம்பட ஆட்சி நடத்தி வருகின்றனர். புரட்சித்தலைவி அம்மா வழிவகுத்த திட்டங்களோடு கூடுதலாகவும் செய்து சாதனை படைத்து வருகின்றனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலோடு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்படும். பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அம்மாவிற்கு நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்று பேசினார்
கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்புரையாற்றுகையில், கடந்த 1972ல் தி.மு.க. எனும் தீய சக்தியை அழிக்க வேண்டும் என்பதற்காகவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தார். பல்வேறு தடைகளை கடந்து இன்று கழகம் ஆலமரம் போல் விருட்சமாக நிற்கின்றது. கருணாநிதி இறந்தவுடன் ஸ்டாலின் முதல்வராக துடிக்கின்றார். தி.மு.க. தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்தே மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை. கருணாநிதி மறைந்த பின்னர் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்துகின்றார். கிராமசபைக் கூட்டம் அவர் தலைமையில் நடக்கின்றது. அவருக்கு பின்னால் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் அமர்ந்துள்ளது வெட்கக்கேடானது. தனது மகன் உதயநிதி மூலம் கூட்டத்தை கூட்டி கட்சியைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மாவின் வழியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். புரட்சி தலைவி அம்மா பொங்கல் பரிசுடன் ரூ.100 வழங்கினார். தற்போது அம்மாவின் அரசு பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இத்திட்;டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டாலின் நடத்துகின்ற கூட்டத்தில் தி.மு.க.வினரை வைத்தே நடத்துகின்றார். ஆனால் அதிலும் கூட்டம் இல்லை. மாறாக கழக அரசு வழங்கக் கூடிய பொங்கல் பரிசு வாங்குவதற்காக கூட்டம் அதிக அளவில் உள்ளது. கட்சி பாகுhபடின்றி தி..மு.க. உள்ளிட்ட அனைவருக்குமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால் தி.மு.க.வினரே அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராகி விட்டனர் என்பது நிதர்சனமான உண்மை. இதனை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே மருமகன் சபரீசன் பேச்சைக் கேட்டு கிராமசபைக் கூட்டம் நடத்தி வருகிறார். மக்கள் அவரை நம்ப வில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தல் ஆகட்டும், இடைத் தேர்தல் ஆகட்டும் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கழகமே மகத்தான வெற்றியை பெறும்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மாவின் வழியில் அவர் கொண்டு வந்த திட்டங்களோடு, கூடுதலாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்காக திட்டம் தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு மக்களின் அன்பு பெருகி வருகிறது. வருகிற தேர்தலில் தமிழக மக்கள் அதனை வெளிக்காட்டுவார்கள். கட்சியையும் ஆட்சியையும் தோற்கடிப்பதற்கு ஒரு ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. கழக ஆட்சிக்கு தமிழக மக்கள் தொடர்ந்து பேராதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல், தேனி திருச்சி மாநகர். புறநகர், கருர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பேரவை நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.