முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு தென்னிந்திய திரைப்படம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் மவுன அஞ்சலி

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை :  தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) சார்பாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சூழ்ச்சியால் நம் இந்திய நாட்டுக்காக தனது இன்னுயிரை நீத்த தமிழ்நாட்டை சார்ந்த இந்திய அதிவிரைவு காவல்படை வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு சங்க தலைவர் டாக்டர். ஜாகுவார் தங்கம் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், 100-க்கும் மேற்பட்டோர் வீர வணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தியை ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலி நிகழ்வில் மேற்கு மாம்பல காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து