முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை, சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை தொடங்க ரூ.1 கோடி நிதி - முதல்வர் எடப்பாடி வழங்கினார்

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை, சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை தொடங்க ரூ.1 கோடி நிதியை முதல்வர் எடப்பாடி நேற்று வழங்கினார்.

நூலகக் கட்டிடம்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டிடம் மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வு மாணவர் விடுதிக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ரூ.1 கோடி நிதி...

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை ஒன்று 1 கோடி ரூபாய் வைப்புத்தொகையாக வைத்துத் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 28.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110–ன் கீழ் அறிக்கை வெளியிட்டார். அதன்படி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) கோ. விசயராகவனிடம் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து