முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி இடம் கொடுப்பதா? மகன் அகிலேஷ் மீது முலாயம் வருத்தம்

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      அரசியல்
Image Unavailable

லக்னோ, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி இடங்களை தந்ததில் தான் வருத்தம் அடைந்தாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

80 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்து வந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. மகன் அகிலே‌ஷ் யாதவ் அமைத்துள்ள இந்த கூட்டணி குறித்து, சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து லக்னோவில் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசும் போது, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி இடங்களை தந்ததில் நான் வருத்தம் அடைந்தேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து